Search This Blog

Sunday, May 7, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (8): திரு. கருப்பையா ப. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (8): திரு. கருப்பையா ப. அவர்களின் இறை அனுபவங்கள்.


கருப்பையா. ப [Karupaia P]



நேர்காணல் விவரம்:

இடம்: இராமர் கொடாப்பு, வாசி மலை அருகில், தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை.

நாள்: சித்தரை 21, 2017 வியாழக்கிழமை [05/04/2017 ] மதியம் 12.53 முதல் 01:18 வரை [12:53 PM to 01:18 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. திரு. இராமர் அவர்கள் மூலமாக சித்தர் அய்யா பிள்ளையை நாகவிளாகத்தில் திரு. கருப்பையா அவர்கள் சந்திக்கின்றார், மலைவாழ் மக்களில் ஒருவரான அவர், வாசி மலை அடிவாரத்திலேயே வாழ்ந்து வருவதை முன்னிட்டு சித்தர் பாராட்டுகின்றார். பின்னர், திரு. கருப்பையா அவர்கள், ஜந்து வயதில் இறந்து மறுபிறவி எடுத்ததும், பாலிய பருவத்தில் ஒரு முறை இறந்து, புதைக்க சென்ற நேரத்தில் புனர் ஜன்மம் எடுத்ததையும், ஆக இரு முறை இறந்து பிறந்ததை சித்தர் ஊடுருவி பார்த்து சொல்ல அவரும் அதை ஆமோதிக்கின்றார்.
  2. அதேபோல் அவருக்கு கருப்புசாமி (இறைசக்தி) துணை நிற்பதையும், அதை உபவாசம் செய்து குறி சொல்லலாம் என்றும் வழிகாட்டுகின்றார். மேலும், திரு. கருப்பையா அவர்களும், ஞானியர் போலவும், தன்னைப் (சித்தர்கள்) போலவும் வாழலாம் என்றும், திரு. இராமரை போல நீயும் எனது மகன் தான் என்றும் கூறியிருக்கின்றார்.
  3. சித்தர் அவர்கள் ஸ்பரிசம் பட, யோக நிலை வசப்படுதல், வாலை பேசுதல், சாமியாடுதல், போன்ற பல ஆத்ம விசேஷங்கள் நடந்தேறியதையும். இந்த இடத்தில் இந்த ஊற்று உள்ளது, இந்த மலையில் இந்த விஷயம் கிடைக்கும் என்பதை போல, அரிய செய்திகள் வெளியானதையும், கண்டு களித்திருக்கின்றார்.
  4. சித்தர் அய்யா பிள்ளையுடன், சதுரகிரி, வாசி மலை, சுரளி, போன்ற பல யாத்திரா பயணங்களில் பங்கேற்றும் இருக்கின்றார். அப்படி சில பயணங்களில் சிலருக்கு சாமி இறங்க மறுத்தாலும், அதை பாடி, விழித்து, இயற்கையாக, இலகுவாக இறக்கியதையும் நினைவு கூறுகின்றார். சித்தர் பேசிய போது, தான் சாமியாடிதையும், நினைவு கூறுகின்றார்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

No comments:

Post a Comment