Search This Blog

Wednesday, March 15, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (3): திரு. குணசீலன். பா அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (3): திரு. குணசீலன். பா அவர்களின் இறை அனுபவங்கள்.

திரு. குணசீலன். பா [Gunaseelan P]

நேர்காணல் விவரம்:
இடம்: பாட்ஷா தோட்டம், மயிலாப்பூர், சென்னை.

நாட்கள்:
மாசி 28 2017 ஞாயிற்றுக்கிழமை [03/12/2017 Sunday] மாலை 3.14 முதல் 3:47 வரை [3.14 PM to 3:47 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. திரு. குணசீலன் அவர்களுக்கு, சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்திக்கும் முன்னரே எண் கணிதம், விநாயகர் வழிபாடு, சிவன் வழிபாடு இவைகளின் மூலம், ஆத்ம அனுபவங்கள் பல கிடைக்கப் பெறுகின்றது. சுயம்பு சக்தியாக வெளிப்பாடும் ஆகின்றது. அவற்றை தொடர்ந்து, குரு தேடலின் நிமித்தம், ஓர் அன்பரின் மூலமாக, சில தடைகளுக்கு பின், வேறொரு அன்பருடன், சித்தர் அவர்களை நேரில் காணும் வாய்ப்பும் இயற்கையாகவே கிடைக்கப் பெறுகின்றது.
  2. சாமியார் என்றாலே, ஏமாற்று பேர்வழிகள், திருடர்கள், என்ற மன நிலையுடன், சித்தர் அய்யா பிள்ளையை, அன்பர் ஒருவர் வீட்டில் நேரில் காணுதல்.
  3. இப்படி சில சந்திப்புகளுக்கு பின், ஒரு முறை சித்தர், திரு. குணசீலன் அவர்களை எதிரில் அமரச் சொல்லி, ’என்ன தெரிகின்றது’, என்று கேட்க, அவருக்கு கருப்பு, வெள்ளை ரூபம் தெரிகின்றது என்று கூற, சித்தர் அதை சிவ சக்தி ரூபம் என்று சொல்லி, உமக்கு நான் எதுவும் சொல்வதற்கு இல்லை, நான் என்ன நிலையில் இருக்கின்றேனோ (அக்காலகட்டத்தில்) அந்த நிலையில் தான் நீயும் இருக்கின்றாய், நீயும் நானும் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்றும் சொல்லி, அவரின் ஆன்மாவின், உயரிய, பூர்வீக சித்த நிலையை பற்றியும் சொல்லி முடிக்கின்றார். மேலும் அவர் மூலமாக, ஆத்ம விஷயங்கள் பலருக்கு கிடைக்கப் போவதையும், செய்திகள் (முக்காலம் உணர்ந்து) சொல்லப் பட போவதையும், முன்னதே கூறுகின்றார்.
  4. இவ்வாறாக, அவருடன் பல சந்திப்புகள், திரு. குணசீலன், அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது. மேலும் சித்தருடன் பேசும் போது, அனைத்தும் மறந்த, ஆனந்த நிலை கிடைக்கப் பெறுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
  5. இப்படி ஆழ்ந்து பழக பழக, ஆத்திகத்தை பற்றி, பல குறிப்புகள் அவருக்கு கிடைக்கின்றது. அவருக்கு விநாயகர் வழிபாடு தேவையில்லை என்றும், நேராக சிவனையே வழிபடவும் சொல்கின்றார். இது திரு. குணசீலன் அவர்களுக்கு சற்று கடிணமாக இருந்தது, ஏனெனில், அவருக்கு ஆத்திகத்தின், முதல் ஈடுபாடே விநாயகர் என்றும், அவர் விநாயகரை, “விநாயகர் அப்பா” என்றே கூறி வந்ததையும், நினைவு கூறுகின்றார்.
  6. ஆத்திகத்தில் இருந்தும், வேலைக்கு சென்று வந்து, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து வந்தும், இருந்த அவருக்கு, திருமணத்தில் சற்றும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது, அத்தருணத்தில், சித்தர் அவருக்கு திருமணம் உண்டு என்றும், மேலும் இரு மகசு உண்டு என்றும், திருவாய் மொழிகின்றார். அதற்கேற்ப அவருக்கு இனிதே திருமணம் நடந்து, ஓர் ஆண் குழந்தையையும் பிறக்கின்றது.
  7. இப்படி நல்ல சுமூகமான உறவில் அவர்கள் லயித்திருக்க, திடீரென்று ஒரு நாள், சித்தர் அய்யா பிள்ளை, ‘என்னை விட்டு ஒருவன் பிரியப் போகின்றான்’, என்று கூற, அது திரு. குணசீலனுக்கு பதட்டத்தை ஏற்படுத்துகின்றது, அவரும் அது தானா என்று விசாரிக்க, சித்தரும் ஆமோதிக்கின்றார். இது இருவருக்கும் சற்று மனக் கசப்பை தருகின்றது.
  8. திரு. குணசீலன் அசைவ உணவை தவிர்க்கும் நோக்கத்துடன், பால், டீ, என அனைத்தையும், மூன்று வருடங்களாக தள்ளி வைக்கின்றார். அதை உணர்ந்த சித்தர், தான் அசைவம் உண்பதையும், தன்னை பின் தொடர்கின்ற அவர், அவற்றை உண்ணாமல் இருந்தால் எப்படி குரு சீடன் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறி, திரு. குணசீலன் அவர்களை டீ அருந்துமாறு கூறுகின்றார், அதன்படி அவரும் அன்றிலிருந்து, குருவின் உத்தரவின் படி, அசைவ உணவும் உட்கொள்ள ஆரம்பிக்கின்றார். அங்கு, அவரை மட்டும், மதுவை, அவ்வப்பொழுது தீர்த்தமாக அருந்துமாறு கூறுகின்றார். பொதுவாக, மருத்துவ ரீதியாக அல்லாமல், இப்படி ஒருவரின் உணவு பழக்க வழக்கங்களில் தலையிடாத சித்தர் அய்யா பிள்ளை அவர்கள், திரு. குணசீலன் அவர்களுக்கு பிரத்தியேக கட்டளையிட்டது, அவர்களின் ஆத்ம வளர்ச்சிக்காகவும், ஆத்ம நிறைவுக்காகவும் என்பது, தெள்ளத்தெளிவாக புரிகின்றது.
  9. முன்னதே, அவர்கள் இருவரும் பிரியப் போகின்றோம், என்று கூறிய தருணத்தில், திரு. குணசீலன் அவர்களுக்குள் லிங்கம் பிடித்து வழிபட வேண்டும் என்ற விதையை, மிக ஆழமாக பதிய வைத்து விடுகின்றார். இன்று வரை, லிங்கம் பிடித்து வழிபாடு செய்வதை, தொடர்ந்து செய்து வருகின்றார். சமீபத்தில், இந்த குறிப்புகளை சேகரிக்க சென்ற பொழுது, இயற்கையோடு ஒன்றித்த, மக்கள் சங்கமிக்க, மனம் ஒருமித்த நிலையில், பரிபூரணமாக அது செய்யப்படுவதை காணும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. அனைவரும் கூடி, பாகுபாடு இன்றி, ஒன்றுபட்டு, ஹோமம் அரங்கேற்றியது எனக்கு தனிப்பட்ட விதத்தில் மிக்க மகிழ்ச்சியை தந்தது. அவர்கள் பிரிந்தது பலரின் நன்மைக்காகவும், திரு. குணசீலன் அவர்களின் வளர்ச்சிக்காவும், என்பது திண்ணமாக புரிந்தது. பொதுவாக, சீடர்கள் வளர்ந்த பின், குருவானவர் தன்னுடன் அவர்களை வைத்துக் கொள்வதில்லை என்பதற்கு, இந்த நிகழ்வு, ஓர் எடுத்துக்காட்டு. இது, குருவை நிந்தனை செய்ததால், குரு விலக்கி வைத்த நிலையல்ல.
  10. லிங்கம் பிடித்து வழிபாடு செய்ததன் மூலம், பல ஆத்ம அனுபவங்கள் அவருக்கு கிடைக்கப் பெற்றதோடு, ஆத்ம சங்கடங்கள் நீக்குதல், தீய சக்திகளை விலக்குதல், என பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.
  11. திரு. குணசீலன் அரங்கேற்றிய சில நிகழ்வுகளுக்கு பின், யாராவது கெடுதல் செய்தாலும், யாரையும் ஆத்ம ரீதியாக தாக்க வேண்டாம் என்ற உத்தரவும் சித்தர் அய்யா பிள்ளை மூலம் அவருக்கு கிடைக்கின்றது. அதன்படி, அவர் இன்றளவும் அவ்வண்ணமே நடந்து கொள்கின்றார்.
  12. திரு. குணசீலன் அவர்கள், திருமணம் செய்த பெண்ணுக்கு, சித்தர் அய்யா பிள்ளையும், திரு. ஆறுமுகன் என்பவரும், இருவரும் சேர்ந்து, திருமணத்திற்கு முன், காட்சியளித்து, அவர்களது திருமணத்தை பற்றியும் சொல்லி, சந்தோஷமாக வாழ ஆசிர்வாதமும் செய்கின்றனர். இதில் விந்தை என்னவென்றால், வந்தது யார் என்று, அந்த பெண்மணிக்கு, பின்னரே, அதுவும் திரு. குணசீலன் அவர்களின் அலைபேசியில், சித்தரின் புகைப்படம் பார்த்த பின்னரே தெரிகின்றது.
  13. கணவுகளில் காட்சி தந்து, தர வேண்டிய உணர்வையும், கருத்தையும், தேவையான நேரத்தில், மனதில் பதிய வைத்தல்.
  14. ஆத்ம விசேஷங்கள் மூலம், நிகழ் காலத்தில் நடக்கும் காட்சி கிடைத்தல். சூச்சும சரீரத்துடன் காட்சி தருதல், என பல ஆத்ம அனுபவங்களை திரு. குணசீலன் அவர்கள் அனுபவித்தல்.
  15. விலகி, அவர்தம் வேலைகளை செய்து வந்தாலும், சித்தர் அய்யா பிள்ளை அனுக்கிரகத்தால் செவ்வனே நடந்து வந்த, மகிஷாசுரமர்த்தினி கோயில் விசேஷங்களான, வருடாந்திர பால் குடம், வருடாந்திர ஹோமம், என அவற்றில் கலந்து கொண்டு, உறவு விட்டுப் போகாமல், அவருடனான ஆத்ம உறவை நிலை நாட்டிக் கொள்கின்றார். அவர்தம் இருதி சமாதியிலும் கலந்து கொள்கின்றார்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

No comments:

Post a Comment